11 July 2020

Messages by Pastor Selvam - TPM Church

  • பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக்கு தேவன் தருகிறார்.
  • மரணமானலும், ஜீவனானாலும் சந்தோஷத்துடன் வாழ வேண்டும், கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிந்து போகக்கூடாது
  • கானான் தேசம் - விசுவாச தேசம், விசுவாச ஆவியை உடையவர்கள். காலேபின் ஆவி இதுதான்...தேவனுடைய வசனத்தை இரவும், பகலும் தியானிக்கிற அனுபவத்தை பெற்றவர்களை ஒருவரும் ஒருக்காலும் எதிர்க்க முடியாது!
  • அத்தி என்பது சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கும் வல்லமை
  • அபிஷேகம் பெற்ற பிள்ளைகளை வியாதிகள் தாக்கலாம்..ஆனால் ஏன் தேவன் அனுமதிக்கிறார் என்றால் மரணமே உன் கூர் எங்கே...பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று நீ கெம்பீரிக்கவும் தேவன் அந்த வியாதியை அனுமதிக்கிறார்
  • உங்களிலே பரிசுத்த ஆவியானவர் வாசமாயிருந்தால் சாவுக்கேதுவான சரிரங்களை உயிர்ப்பிப்பார்...மரணத்தை அச்சுறுத்தி ஜீவனையும், அழியாமையும் உங்களுக்குள் உருவாக்குவார்...மரணத்தை பரிகரித்து உன்னை மகிமையினாலும், கனத்தினாலும் முடிச்சூட்டுவார்....
  • மன, ஆத்ம போரட்டத்தை தர பிசாசானவன் யாரை விழுங்கலாம் என்று சோதனைகளையும்,பிரச்சனைகளையும் கொண்டு வருகிறான்... என்னை விழுங்க சுற்றித்திரியும் அவனை, நானோ யூதா கோத்திரத்து சிங்கமாக அவனை விழுங்குவேன்
  • சபைக்கு விரோதமாக, மகிமைக்கு விரோதமாக, வருகைக்கு எழும்பும் பிசாசுக்கு நாம் சவால் விட வேண்டும்
  • ஒரு ஊழியர் வியாதியில் இருக்கும் போது... மற்றவர்கள் கேட்கும்போது அவர் இப்படி சொன்னாராம்... "யுதா கோத்திரத்து சிங்கம் இயேசுவாக எனக்குள் இருக்கிறார்"
  • ஒரு குழந்தையைப் போல தேவ வசனத்தை கேட்டவர்கள் பழைய மனுஷனை அழித்துப்போட்டார்கள்.....இதைப்போல நாமும் மாற வேண்டும்.
  • ஆவியினாலே நம் மாம்ச கிரியைகளை அழிக்க வேண்டும்.... அவைகளை அழிக்க தவறினால் அவைகள் உங்களை அழித்துவிடும்
  • அவர் மரணத்தை ஜெயமாக விழுங்கினது போல.... நமக்கும் மரணத்தை ஜெயமாக விழுங்க உதவி செய்கிறார்
  • ஆத்துமா ஈடேற நாம் விசுவாசிக்கிறவர்களாக இருப்போம்...
  • முற்றும் ஜெயங்கொள்கிறவர்களாக இருங்கள்... Be Overcomer
  • நாம் பெலத்தின் மேல் பெலன் அடைய அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடக்க வேண்டும்....
  • விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருக்க வேண்டும்....
  • உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.சங்கீதம் 84:5-7

Popular Posts