வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தால் முழுக் குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்தவர்களாக காணப்பட்டனர். இவர்களது பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க இவரை வணங்கிய எந்த எந்த இந்து தெய்வமும் முன்வரவில்லை. இவ்வேளையில் சென்னை அண்ணாசாலையில் கிறிஸ்தவ சபை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பியூலா லாலுக்கு சென்னை கிதியோனியர்களால் புதிய ஏற்பாடு ஒன்று கொடுக்கப்பட்டது.
வேத புத்தகத்தை வாசிக்க விட்டாலும் அதை தனது தலையணையின் அடியில் வைத்துக் கொண்டாள், அவளது எண்ணம் புதிய ஏற்பாடு ஏதாவது விடுதலையைக் கொண்டுவரும் என்பதாக இருந்தது.சினேகிதி ஒருவரால் ஜெபக் கூடுகை அழைப்பு கொடுக்கப்பட்டும் அவளோடு அங்கு கலந்து கொண்டபோது உயிரோடு இருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொண்டாள்.
அங்கு வைத்து ஏசாயா 41:10 வசனத்தை கேட்க நேர்ந்தது "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலது கரத்த்னால் உன்னைத் தாங்குவேன்". இவ்வசனம் தனக்கு கொடுக்கப்பட்டதாக உணர்ந்தாள் அவள். இயேசுவைக் குறித்து அவரது பிறப்பு, வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள், அவரது போதனை, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் பட்ட பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், ஆகியவைகளை குறித்து அறிந்த போது அவளது ஆவியிலே தூண்டப்பட்டாள். இயேசுவை நோக்கி ஜெபித்த போது பியூலா ஒரு சமாதானத்தைப் பெற்றாள். பரிசுத்த ஆவியானவர் "என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலன் உண்டு" என்ற பிலிப்பியர் 4:13 ஆம் வசனத்தை வெளிப்படுத்தி கொடுத்தார்.
வீட்டில் இருக்கையில் இயேசுவைக் குறித்து எண்ணும் போது அவளது குடும்ப பிரச்சனைகள், இந்து விக்கிரகங்கள் மீதுள்ள நம்பிக்கை இவ்வாறாக அனேக கேள்விகள் மனதில் தோன்றின, அந்த புதிய ஏற்பாட்டிலும் இவைகளை குறித்து கேள்வி கேட்கிறவளாக காணப்பட்டாலும் அவள் வேதத்தை வாசிக்கவில்லை என்றபோதிலும் ஆவியானவர் அவளது கேள்விகளுக்கு உகந்த பதிலை வேத புத்தகத்திலிருந்து அவளுக்கு வெளிப்படுத்தி கொடுத்தார்.
இந்தப் பயிற்சி சில மாதங்கள் தொடர்ந்தது ஒரு முழு வேத புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள். இயேசு கிறிஸ்துவை குறித்து அதிகமாக அறிந்த போது தனது பாவங்களுக்காக மெய்யாக மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பினாள். இயேசு கிறிஸ்துவை தனது சொந்த ஆண்டவரும் இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பியூலா திருமுழுக்கு பெற்றாள், அவரது குடும்பத்தினரையும் கிறிஸ்துவ விசுவாசத்திற்கு நேராக வழி நடத்தினார்.
இக்குடும்பம் இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டவர்களாகவும், அவர் மேல் கட்டப்பட்டவர்களாகவும் அவரில் நடந்துகொண்டு ஸ்தோத்திரத்தோடு,விசுவாத்தில் பெருகி வருகின்றார்கள். பியூலா இப்போது குடும்பத் திற்கும், அயலகத்திற்க்கும் ஆசீர்வாதத்தை கொடுக்கும் சாட்சியாக வாழ காரணம் கிதியோனியர்களால் வழங்கப்பட்ட ஒரு சிறிய புதிய ஏற்பாட்டினாலே என்று கர்த்தருக்குள் மகிழ்கின்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
20 September 2020
இயேசுவின் நாமத்தினால் எல்லாவற்றையும் அழகாக்குகிறார்!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/