முத்துகிருஷ்ணன் என்பவர் கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார் நன்றாக புத்தகங்களை விரும்பி வாசிப்பவர் தன் படிப்பில் சிறந்து விளங்க விட்டாலும் தலை சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார். மார்க்சிசம் மற்றும் லெனினிசம் என்ற கம்யூனிசக் கொள்கையில் தம்மை ஈடுபடுத்தி கடவுள் இல்லை என்று சாதித்து வந்தார் அதன்பின் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் அவரது பேச்சு திறனை உணர்ந்த கட்சியினர் அவரை மேடைப்பேச்சாளர் பணியில் அமர்த்தினர்.
கரூர் கிபியோனியர் முகாமை சார்ந்தவர்கள் ஒருநாள் அக்கல்லூரியில் சென்று வேதப் புத்தகங்களை கொடுத்தனர் அச்சமயம் முத்து கிருஷ்ணனுக்கும் ஒரு வேத புத்தகம் கிடைத்தது அவர் அதை வாசித்து அதில் நாத்திகத்துக்கு சாதகமான செய்தி ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொரு பகுதியையும் தீவிரமாக ஆய்வு செய்தார்.மத்தேயு அதிகாரம் 21 ஆம் வசனம் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவர் என்ற வார்த்தைகளை வாசித்த போது இயேசு ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவர் என்ற வார்த்தை அவரை மேலும் சிந்திக்க தூண்டியது.
தொடர்ந்து வேத புத்தகத்தை வாசித்த போது இயேசுவின் வாழ்க்கை அவரது வல்லமைமிக்க அற்புத செயல்கள் கோரமான சிலுவை மரணம் உயிர்ப்பு போன்ற செய்திகள் முத்துகிருஷ்ணன் உள்ளத்தை தொட்டது ஒரு சில நாட்களில் அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ரட்சகராக ஏற்றுக் கொண்டார் இதை அறிந்த கம்யூனிஸ்டுகள் அவரை கொலை செய்ய முயன்றனர் ஆனால் கர்த்தர் அவரை தீயோரின் கைகளுக்கு நீங்கலாக்கி பாதுகாத்தார். இன்று அவர் கரூர் அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்ந்து வருகிறார்.
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
13 September 2020
இயேசுவிடம் வந்த கம்யூனிஸ்டு!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/