நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள பூரண சுவிசேஷ பெந்தெகோஸ்தே சபையில் திரு.ஜாய்சன் என்பவர் போதகராயுள்ளார். இவர் ஒரு இந்து அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்தவர். இந்து சமய வழிபாடுகளிலும், மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றாவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்துபோது ஒருநாள் அவருக்கு ஒரு வேத புத்தகம் கிதியோனியர்களால் இலவசமாக வழ்ங்கப்பட்டது. அப்புத்தகத்தை அவர் தமது புத்தக அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
சிலகாலம் சென்றபின் அப்புத்தகம் தம்மிடம் இருந்ததை மறந்துபோனார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின், அரசில் வருமானவரி ஆய்வாள்ராக பணியேற்றார். ஒரு நாள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்னல் தாக்கியது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், சிலகாலம் மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுப் பின் நலம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து பயம் என்னும் மனநோயினால் அவதியுற்றார். எப்பொழுதாவது மழை, இடி, மின்னல் ஏற்படும் போது பயத்தினால் பாதிக்கப்பட்டு நடுங்குவார். இவ்விதமான கொடிய சூழலில் தமக்கு கிடைத்த வேதபுத்தகம் அவரது நினைவிற்கு வந்தது. அப்புத்தகத்தைத் தேடி வாசித்தபோது யோவான் 14:27 ( உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக) அவரது உள்ளத்தில் ஒரு தைரியத்தை கொடுத்தது, பயம் மறைந்தது. இயேசு கிறிஸ்துவை இரட்சராக ஏறுக்கொண்டார். அரசுப் பணியை துறந்து முழுநேர ஊழியராய் மாறினார்.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் #கலங்காமலும் #பயப்படாமலுமிருப்பதாக.யோவான் 14:27
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
13 September 2020
இந்து பூசாரியின் மகன் இப்போது வல்லமையுள்ள கடவுளின் ஊழியக்காரன்!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/