13 September 2020

ரிக்ஷா வண்டி ஓட்டுனர் போதகர் ஆனார்!

 பகவான் சகாய் என்ற மாணவர் ஒரு ஏழை இந்து குடும்பத்தில் நான்கு மூத்த சகோதரர்களுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக பிறந்தவர். இவருடைய பெற்றோர் தின கூலிக்கு வேலை செய்கிறவர்கள், குடும்பத்தில் வறுமை எனவே நான்கு சகோதரர்களும் ரிக்ஷா வண்டி ஓட்டுனராக பணிபுரிந்தனர்.

இவரை மட்டும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பயில வைத்தனர் இவரது தந்தையார் இவருக்கு சிறு வயதில் காலமானதால் கல்வியை நிறைவு செய்ய இயலவில்லை.வாலிப பருவம் அடைந்ததும் தனது சகோதரர்களை போல ரிக்ஷா ஓட்டும் தொழிலை மேற்கொண்டார் தான் சம்பாதிக்கும் பணம் தமக்கே போதவில்லை சூதாட்டமும் எல்லா வகையான கூடா நட்பும் ஏற்பட்ட காரணத்தினால் திருட்டு தொழிலில் ஈடுபட்டார்.

1966-ம் வருடம் இவரது சகோதரருக்கு வழங்கப்பட்ட "நயா நியமம்" என்ற சிவப்பு நிற புதிய ஏற்பாடு வீட்டில் கேட்பாரற்று கிடந்தது அப்புத்தகத்தை எடுத்து ஆர்வத்தினால் வாசிக்க ஆரம்பித்தார் .அதில் இயேசு கிறிஸ்துவையும் அவர் செய்த அற்புதங்களையும் கண்டார் ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் திருட்டுத் தொழிலையே செய்து வந்தார்.

சில வருடங்களில் அவருடைய தாயாரும் காலமாகிவிட்டார்கள். தமது தீய குணத்தின் காரணமாய் எல்லோராலும் வெறுக்கப்பட்டு அசுத்த ஆவியின் பிடியில் சிக்கித்தவித்தவராக 1997 ஆம் ஆண்டு மனமறிந்து தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் படி ஓடினார்.

அந்த நேரத்தில் நன்கு உடை அணிந்த 3 வாலிபர்கள் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக சில புத்தகங்களை வழங்குவதை கண்டார் அவர்கள் அவருக்கும் ஒரு புத்தகத்தை கொடுத்து அதைப் படிக்கும்படி சில வழிகளை காண்பித்து இப்புத்தகம் நல்வாழ்வுக்கு எப்படி உதவும் என கூறினார்கள்.

இங்கு ஏதாவது இந்த புத்தகத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வசதியான இடம் உண்டா என வினவிய போது, அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.வேத புத்தகத்தை பெற்ற அவர் தொடர்ந்து வாசித்து வரவே அவரின் தீமையான எண்ணங்கள் மறைந்து புதிய மனிதனாக வாழ்க்கையை மேற்கொண்டார்.

அதன்பின் வேதாகம கல்லூரியில் இணைந்து அறிவியல் கல்வியை 2000 ஆண்டில் நிறைவு செய்து போதகப் பணியை ஏற்றுக் கொண்டார். 2002 ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்ட அவர் பாரத்பூர் என்ற இடத்தில் நான்கு திருச்சபைகளை நிறுவி போதக பணியை செய்து வருகின்றார். "நான் தற்கொலை செய்த சென்ற போது ஒருவரின் வேத புத்தகம் என் கையில் கிடையாதிருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்குமோ" என்று கூறுகின்றார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts