டாக்டர் கோவிர்த்தினி கடவுளுக்குப் பயப்படுகிற இந்து குடும்பத்தில் பிறந்தார் . ஒரு கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றதினால் அநேக வேளைகளில் நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதை அறியாதிருந்தார். அநேக வேளைகளில் அவருக்காக அநேகர் ஜெபித்தனர்.
மலேசியா நோய் தடுப்பு பிரிவில் மருத்துவ ஆய்வுத் தலைவராகப் பணியாற்றிய வேளையில் ஒரு பள்ளியை ஆய்வு செய்வதற்க்காக கடந்து சென்றனர். அப்பள்ளியின் முதல்வரும், மாணவர்களும் இவர்களுக்கு சங்கீதங்கள் அடங்கிய புதிய ஏற்பாட்டை வழ்ங்கினர். அதைத் தொடர்ந்து அவர் எங்கு சென்றாலும் அப்புதிய ஏற்பாட்டை எடுத்துச் சென்றார்.
சவுதி அரேபியாவிற்கு சென்றபோதும் மற்ற சமயப் புத்தகங்களோடு இந்தப் புதிய ஏற்பாட்டினையும் எடுத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டில் அவருக்கு மிகவும் ஆறுதல் அளித்த பகுதி சங்கீதம் 23 ஆகும். அவர் வேலையை இழந்து துன்புற்று வேளையில் சென்னையிலிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களிடம் ஜெபிக்கச் சொல்லியும் தம்மிடமிருந்த வேதபுத்தகத்தை வாசித்தும் ஆறுதலடைந்தார். அடுத்த பத்து நாட்களில் தாம் வேலை பார்த்த இடத்திற்க்கு அருகாமையிலுள்ள இன்னொரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியா வரும்வரை அவரது வாழ்வில் நடைபெற்ற எல்லா சம்பங்களிலும் கடவுளின் கரம் இருந்ததை தெளிவாகக் கண்டார். இந்நிலையில் சென்னையில் கர்த்தரின் கரம் என்ற ஸ்தாபனத்தைச் சார்ந்த சுவிசேஷகரோடு தொடர்பு கிடைத்தது. இங்கு வந்த பின் உண்மையான் ஜீவிக்கின்ற ஆண்டவராகிய இயேசுவைச் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார்.
ஒரு நல்ல வேலை, தங்குவதற்கு ஒரு இடம் , ஒரு திருச்சபை ஆகியவற்றைத் தந்தார். கர்த்தர் அவரது எல்லா தேவைகளையும் சந்தித்தார். தற்போது விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறார். அவரது பெற்றோரும் , குடும்பத்தினரும் கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பினால் ஆட்கொள்ளப்பட்டனர். இன்று கிறிஸ்து தமக்கு ஒரு உறுதியான சாட்சியாக அவரை பயன்படுத்திகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக!
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
13 September 2020
டாக்டர் கோவிர்த்தினி கடவுளின் நிபந்தனையில்லாத அன்பை ருசித்தார்!
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/