20 September 2020

அதோ... மணவாளன் வந்துக்கொண்டிருக்கிறார்!

 💕 நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், வெளிநாட்டிலிருந்து வந்த வருங்கால மாப்பிளையும்💕

"உன்னவர்தான் தூரத்தில் வருகிறார் ஆம் அவர் உன்னுடையவர் தான்... என் இரண்டு கண்களினாலே பார்த்தேன் நீ வேணா வந்து பாரேன்" என்றாள் என் பக்கத்துவீட்டு தோழி. ✌👆🏼👍🤝👀👁

நானும் இதயம் படபடக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்று கூட கவனிக்காமலும் ஓட்டமாய் ஒடினேன். .... ஆம் என்னவர்தான் ஆம் அவரே தான் அதே நடை, அதே சாந்தம், அதே கண்கள், அதே முகம் .... அதோ வந்துக்கொண்டிருக்கிறார்... ஐந்து நிமிடத்தில் இதோ வந்துவிடுவார். ஆ ஐயோ சந்தோஷம். .... நான் என்ன செய்வேன் தெரியலையே ....!😙😚😍

எத்தனை வேதனை, எவ்வளவு துக்கத்தை சகித்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுவேன், உன்னை எல்லோருக்கும் முன்பாக திருமணம் செய்வேன் என்று சொல்லிப்போனவர் இன்றும்தான் வருகிறார். 🙏💕💓

பக்கத்துவீட்டு தோழிகள் கூட சொன்னதுண்டு,😏😠😦🤔🙄 இன்னுமா உன் ஆளுக்காக காத்திருக்கிறாய் நிச்சயம் பண்ணி மூன்று வருஷம் ஆகிவிட்டது, வந்துவிடுவேன் என்று போனவர் இன்னும் வரவில்லை. நான் சொன்னேன் "எத்தனை வருஷம் ஆனாலும் சரி, நான் அவருக்காகதான், அவர் என்னுடையவர் தான் "👉👆🏼😀💃🏃‍♀🚶‍♀💑

இதோ அருகில் வந்துவிட்டார், நான் அவரை நோக்கி ஓடினேன், என் கண்களில் கண்ணீர் கொப்பளித்து, முகத்தை நனைத்தது. ஓடோடிபோய் அவரை பிடித்துக்கொண்டேன், அழுகை.... அழுகை... கண்ணீர் கண்ணீர் முகத்தை நினைத்தது. 😭😭😥😢😪😓

எங்களை சுற்றி யார் நிற்கிறார்கள் நாங்கள் அறியோம்.💕❤💓

💞✝வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.எபிரெயர் 10:37💞✝

தூக்கமின்மையால் அவதிப்பட்ட சகோதரனுக்கு வேத வார்த்தைகள் தூக்கத்தை கொடுத்தன!

குஜராத் மாநிலம் அலகாபாத் நகரைச் சார்ந்தவர் சந்திரகாந்த் செளதாலா. இவர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர், இவர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஒருமுறை கிதியோனியர்கள் அகாமதாபாத் நகரில் உள்ள பள்ளிகளில் வேத புத்தகத்தை கொடுத்தனர் அதைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளின் கைகளில் இருந்த வேத புத்தகத்தை செளதாலாவும், அவரது நண்பரும் வலுக்கட்டாயமாக பறித்து கிழித்து தீயிட்டு எரித்தனர். இதைக்கண்ட கிடியோனியர்கள் இவரின் மாற்றத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்தனர்.

அவர் பல நாட்களாக பகலும் இரவிலும் தூக்கமின்றி அவதிப்பட்டார், பல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் சரியாக தூங்க முடியவில்லை. எந்தவித பலனும் இல்லை, எனவே அவரது நண்பர்கள் நல்ல ஒரு மன நல மருத்துவரை பார்க்க அறிவுரை சொன்னார்கள். மருத்துவர் அவரிடம் பலகாரியங்களை கேட்டு அறிந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை கொடுத்து கடந்த சில மாதங்களாக அவர் செய்த ஒவ்வொரு செயலையும் தெளிவாக எழுதும்படி சொன்னார், அவர் அப்படி எழுதி மருத்துவரிடம் கொடுத்தார்.  அதில் வேத புத்தகம் கிழித்து எறிந்த செய்தியும் இடம் பெற்றிருந்தது. மருத்துவர் அதை வாங்கிப் பார்த்தார் வேத புத்தகம் கிழித்து எறிந்த செய்தி தவிர மற்ற எல்லாவற்றையும் பேனாவால் வெட்டிவிட்டு,  நீ கிழித்தெறிந்தது போன்ற வேத பிரதி ஒன்றை வாங்கி படி அப்பொழுது உனக்கு தூக்கம் வரும், இது தவிர வேறு மருந்து கொடுக்கத் தேவையில்லை என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
 
செளதாலா அகமதாபாத் நகரிலுள்ள வேதாகமப் புத்தகக் கடைக்குச் சென்று நீலநிற வேதபுத்தகம் தருமாறு கேட்டார். அந்த புத்தகம் எங்களிடம் இல்லை என்று கூறிய புத்தகக் கடைக்காரர், கிதியோனியரை தொடர்பு கொண்டு ஒரு நீல நிற புதிய ஏற்பாடு கொண்டுவரச் செய்து அதை அவருக்கு அன்பளிப்பாக கொடுக்க செய்தார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று வாசிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் தம்மை அறியாமலேயே தூங்கிவிட்டார் அதைக் கண்ட அவரது தந்தை நேராக மருத்துவரிடம் சென்று நீங்கள் என் மகனுக்கு என்ன மருந்து கொடுக்கிறீர்கள் பல நாட்களாக தூக்கமின்றி அவதிப்படுபட்டவன் இப்பொழுது நன்றாக தூங்குகிறான் என்று கூறினார். அதற்கு மருத்துவர் அவன் கிழித்து எறிந்த வேத புத்தகத்தை வாங்கிப் படிக்கச் சொன்னேன்,  இப்பொழுது நல்ல தூக்கம் வருகிறது என்று செளதாலா கூறினதாக சொன்னார்.  தொடர்ந்து இந்தப் புத்தகத்தினை குடும்பத்தினர் அனைவரும் படித்து கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு முழுக் குடும்பத்தினரும் ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்து வருகின்றனர். தேவனுக்கே மகிமை!

நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக  அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு  கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது  உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:        91-984-9991758
                  91-040-64598883
                  91-040-64537773                                           
            
E-Mail:        tgi.in@gideons.org.in

Address:     The Gideons International In India
                  Plot# 140, Maithri Enclave,
                  J. J. Nagar Colony P.O,
                  Near Indus World School,
                  Yapral, Secunderabad - 500 087
                  Andhra Pradesh,
                  India

இயேசுவின் நாமத்தினால் எல்லாவற்றையும் அழகாக்குகிறார்!

வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தால் முழுக் குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்தவர்களாக காணப்பட்டனர். இவர்களது பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க இவரை வணங்கிய எந்த எந்த இந்து தெய்வமும் முன்வரவில்லை. இவ்வேளையில் சென்னை அண்ணாசாலையில் கிறிஸ்தவ சபை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பியூலா லாலுக்கு சென்னை கிதியோனியர்களால் புதிய ஏற்பாடு ஒன்று கொடுக்கப்பட்டது.
 
வேத புத்தகத்தை வாசிக்க விட்டாலும் அதை தனது தலையணையின் அடியில் வைத்துக் கொண்டாள், அவளது எண்ணம் புதிய ஏற்பாடு ஏதாவது விடுதலையைக் கொண்டுவரும் என்பதாக இருந்தது.சினேகிதி ஒருவரால் ஜெபக் கூடுகை அழைப்பு கொடுக்கப்பட்டும் அவளோடு அங்கு கலந்து கொண்டபோது உயிரோடு இருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொண்டாள்.

அங்கு வைத்து ஏசாயா 41:10 வசனத்தை கேட்க நேர்ந்தது "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலது கரத்த்னால் உன்னைத் தாங்குவேன்".  இவ்வசனம் தனக்கு கொடுக்கப்பட்டதாக உணர்ந்தாள் அவள். இயேசுவைக் குறித்து அவரது பிறப்பு, வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள், அவரது போதனை, மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் பட்ட பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், ஆகியவைகளை குறித்து அறிந்த போது அவளது ஆவியிலே தூண்டப்பட்டாள். இயேசுவை நோக்கி ஜெபித்த போது பியூலா ஒரு சமாதானத்தைப் பெற்றாள். பரிசுத்த ஆவியானவர் "என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலன் உண்டு" என்ற பிலிப்பியர் 4:13 ஆம் வசனத்தை வெளிப்படுத்தி கொடுத்தார்.

வீட்டில் இருக்கையில் இயேசுவைக் குறித்து எண்ணும் போது அவளது குடும்ப பிரச்சனைகள், இந்து விக்கிரகங்கள் மீதுள்ள நம்பிக்கை இவ்வாறாக அனேக கேள்விகள் மனதில் தோன்றின, அந்த புதிய ஏற்பாட்டிலும் இவைகளை குறித்து கேள்வி கேட்கிறவளாக காணப்பட்டாலும் அவள் வேதத்தை வாசிக்கவில்லை என்றபோதிலும் ஆவியானவர் அவளது கேள்விகளுக்கு உகந்த பதிலை வேத புத்தகத்திலிருந்து அவளுக்கு வெளிப்படுத்தி கொடுத்தார்.

 இந்தப் பயிற்சி சில மாதங்கள் தொடர்ந்தது ஒரு முழு வேத புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள். இயேசு கிறிஸ்துவை குறித்து அதிகமாக அறிந்த போது தனது பாவங்களுக்காக மெய்யாக மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பினாள். இயேசு கிறிஸ்துவை தனது சொந்த ஆண்டவரும் இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பியூலா திருமுழுக்கு பெற்றாள், அவரது குடும்பத்தினரையும் கிறிஸ்துவ விசுவாசத்திற்கு நேராக வழி நடத்தினார்.
 
இக்குடும்பம் இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டவர்களாகவும், அவர் மேல் கட்டப்பட்டவர்களாகவும் அவரில் நடந்துகொண்டு ஸ்தோத்திரத்தோடு,விசுவாத்தில் பெருகி வருகின்றார்கள். பியூலா இப்போது  குடும்பத் திற்கும், அயலகத்திற்க்கும் ஆசீர்வாதத்தை கொடுக்கும் சாட்சியாக வாழ காரணம் கிதியோனியர்களால் வழங்கப்பட்ட ஒரு சிறிய புதிய ஏற்பாட்டினாலே என்று கர்த்தருக்குள் மகிழ்கின்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக  அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு  கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது  உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:        91-984-9991758
                  91-040-64598883
                  91-040-64537773                                           
            
E-Mail:        tgi.in@gideons.org.in

Address:     The Gideons International In India
                  Plot# 140, Maithri Enclave,
                  J. J. Nagar Colony P.O,
                  Near Indus World School,
                  Yapral, Secunderabad - 500 087
                  Andhra Pradesh,
                  India

19 September 2020

நீல சிவப்பு பச்சை நிற சிறிய புத்தகங்களால் மாற்றுருவாக்கம்!

சம்பத்குமார் நாயுடு ஒரு உறுதியான இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் துக்கம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது ஒரே ஆறுதல் வாழ்க்கையில் கிதியோனியர்களால் கொடுக்கப்பட்ட வேதபுத்தகமாகவே இருந்தது.  

 வேத புத்தகத்தை ஆவலோடு திரும்பத் திரும்ப வாசித்தபோது 1982 ஆம் ஆண்டு தம்முடைய வாழ்வின் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து மறுபிறப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டார் வேத புத்தகத்தை தொடர்ந்து வாசித்தபோது ஆண்டவர் பலர் வேத சத்தியங்களை அவருக்கு வெளிப்படுத்தி கொடுத்தார்.  அவை ஒவ்வொன்றும் அவருக்கு புதிதாக இருந்தது அவருடைய குடும்பத்தினருக்கு இவர் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவ்வாறு கிறிஸ்துவத்தை பின்பற்றுவது ஒரு குற்றம் என்றும் அவ்வாறு கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களை தாழ்ந்த ஜாதியார் என்றும் கருதினர்.
 
தொடர்ந்து வேதத்தை வாசித்தபோது மத்தேயும் 19:29 ஆம் வசனம் அவரது கவனத்தை ஈர்த்தது "என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது சகோதர சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியாவது, பிள்ளைகளையாவது இழந்து விட்டவன் எவனோ அவன் நூறத்தனையாக அடைந்து நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்" என்ற வசனம் இவரை ஆறுதல் படுத்தியது.
 
இயேசு கிறிஸ்துவின் அன்பானது தந்தையைப் போன்ற அன்பும், தாயைப் போன்ற பரிவும் அவரது வழிகாட்டியும் நண்பனும் ஆக இந்த கடினமான பாதையில் இலகுவாக நடத்தியதாக அவர் கூறுகின்றார். அவரின் நாட்களில் இயேசு கிறிஸ்துவினால் வரும் நீடிய ஆசீர்வாதங்களை பிறரோடு பகிர்ந்து வருகின்றார். அன்னார் இன்று கிறிஸ்துவ தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனத்தின் நிறுவன தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். இயேசு கிறிஸ்துவின் அரசு கட்டப்படுவதில் ஆண்டவர் அவரை வல்லமையாக உபயோகித்து வருகின்றார். கர்த்தருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக இவ்வண்ணமாக தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதில் பங்கு கொண்டுள்ள கிதியோனியருக்கும்  நன்றியை அவர் சொல்லுகிறார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவின் அன்பை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோன் என்ற ஸ்தாபனத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்து, இலவசமாக  அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் பைபிளின் புதிய ஏற்பாட்டை இயேசுவின் அன்பை அறியாத மக்களுக்கு  கொடுக்க விரும்பினால் , கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் அல்லது  உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமில் விவரங்களை பெறலாம் அல்லது உங்களின் சபை போதகரை அணுகலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

13 September 2020

அவர் என்னுடைய நேசர், நான் அவருடையவள்!

திருமதி பிலோ அருள்தாஸ் ஓர் உறுதியான கத்தோலிக்கத் திருச்சபையை சார்ந்தவர் அவர் மதுரை கேப்ரன் ஹால் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.கிதியோனின் இயக்கத்தை சார்ந்தவர்கள் வேதப் புத்தகங்களை அப்பள்ளிக்கு வினியோகிக்க சென்ற போதெல்லாம் அவர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு தானும் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தார்.

கடந்த 1990ஆம் ஆண்டு பள்ளியில் நடந்த வழங்கலின் போது ஒரு பிரதியை இது யூனியோ அவருக்கும் வழங்கினார் அப்புத்தகத்தை ஒருநாள் அவர் புரட்டிப் பார்த்தபோது யோவான் 11 வாசிக்க நேர்ந்தது. ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற வேத வாக்கியம் இவரை கவர்ந்தது எனவே அப்பகுதியை தொடர்ந்து வாசித்தார் வாசித்துக் கொண்டே இருக்கும் போது எல்லாமே புதிதாக அவருக்கு தோன்றியது.அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து வாசித்து வரும் போது வேதம் அவருக்கு சமாதானம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது இருதயமும் மனதும் தேற்றப்பட்டதை உணர்ந்தார்.

தாகத்தோடு இருந்த அவ்வளவு ஆவி இறுதியாக வேத வசனங்கள் இழுக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார் அவள் இந்த புதிய அனுபவத்தை தனது கணவரோடு பகிர்ந்துகொண்டு வேதத்தை வாசிக்க தூண்டினாள். அவனது வாழ்க்கையில் காணப்பட்ட மாற்றங்களை கண்ட அவரது கணவரும் இயேசுவிற்கு தம் வாழ்வை ஒப்புக்கொடுத்தார். அவர்களது இல்லத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் திருமுழுக்குப் பெற்று கிதியோன் மதுரை தெற்கு முகாமில் அங்கத்தினராக இறைத்தொண்டு செய்து வருகின்றனர்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

சிறைக்கைதி போதகரானார்!

ராஜன் என்பவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார். அந்நாட்களில் அவர் காவலாளியின் உதவியுடன் தோல் சுருள்களை திருடி வெளி சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்தார் நிறுவனத்தின் மேலாளர் இதைக் கேள்விப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது இப்பதான் காவலாளியின் உதவியோடு செய்து வந்தார் என்பது நிரூபணமானது இதனால் காவலாளி தனக்கு எதிராக சாட்சி அளிக்கக் கூடும் என்று பயந்த ராஜன் இக்குற்றத்தில் தொடர்புடைய காவலாளி கொலை செய்தார்.

எனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

ஒரு நாள் சென்னையில் உள்ள கிதியோன் இயர் சிறைச்சாலையில் வேதப் புத்தகங்களை வழங்கினர். அப் புத்தகங்களில் ஒன்றை பெற்று ராஜன் அதை படிக்க ஆரம்பித்தார் ரோமர் 3: 23ம் அதிகாரத்தில் 24ஆம் வசனங்கள் அவர் உள்ளத்தை தொட்டன.

இயேசு ஒருவரே தமக்கு மன நிம்மதி தரமுடியும் என தன் மனதில் தெளிவு பெற்றார் குறுகியகால சிறைவாசத்துக்குப் பின்னர் இவரது குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதனால் சிறையிலிருந்து விடுதலையானார் அங்கிருந்து தஞ்சாவூருக்கு சென்று ஊழியம் மேற்கொண்டு 300 பேர் அடங்கிய திருச்சபையில் தற்போது போதகர் என்ற பெயருடன் பணியாற்றி வருகிறார்.
 
 நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
           
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

இயேசுவிடம் வந்த கம்யூனிஸ்டு!

முத்துகிருஷ்ணன் என்பவர் கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார் நன்றாக புத்தகங்களை விரும்பி வாசிப்பவர் தன் படிப்பில் சிறந்து விளங்க விட்டாலும் தலை சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார். மார்க்சிசம் மற்றும் லெனினிசம் என்ற கம்யூனிசக் கொள்கையில் தம்மை ஈடுபடுத்தி கடவுள் இல்லை என்று சாதித்து வந்தார் அதன்பின் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் அவரது பேச்சு திறனை உணர்ந்த கட்சியினர் அவரை மேடைப்பேச்சாளர் பணியில் அமர்த்தினர்.

கரூர் கிபியோனியர் முகாமை சார்ந்தவர்கள் ஒருநாள் அக்கல்லூரியில் சென்று வேதப் புத்தகங்களை கொடுத்தனர் அச்சமயம் முத்து கிருஷ்ணனுக்கும் ஒரு வேத புத்தகம் கிடைத்தது அவர் அதை வாசித்து அதில் நாத்திகத்துக்கு சாதகமான செய்தி ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொரு பகுதியையும் தீவிரமாக ஆய்வு செய்தார்.மத்தேயு அதிகாரம் 21 ஆம் வசனம் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவர் என்ற வார்த்தைகளை வாசித்த போது இயேசு ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவர் என்ற வார்த்தை அவரை மேலும் சிந்திக்க தூண்டியது.

தொடர்ந்து வேத புத்தகத்தை வாசித்த போது இயேசுவின் வாழ்க்கை அவரது வல்லமைமிக்க அற்புத செயல்கள் கோரமான சிலுவை மரணம் உயிர்ப்பு போன்ற செய்திகள் முத்துகிருஷ்ணன் உள்ளத்தை தொட்டது ஒரு சில நாட்களில் அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ரட்சகராக ஏற்றுக் கொண்டார் இதை அறிந்த கம்யூனிஸ்டுகள் அவரை கொலை செய்ய முயன்றனர் ஆனால் கர்த்தர் அவரை தீயோரின் கைகளுக்கு நீங்கலாக்கி பாதுகாத்தார். இன்று அவர் கரூர் அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்ந்து வருகிறார்.

 நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

மருத்துவ மாணவரின் மனமாற்றம் உண்மையான கடவுளை தேடி...

பன்னீர்செல்வம் என்பவர் தஞ்சாவூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 1997ஆம் ஆண்டில் மருத்துவம் பயின்று வந்தார். உண்மையான இறைவன் ஒருவர் இருப்பாரானால் தம்முடைய தீய வாழ்க்கையில் மாற்றட்டும் என்று சவால் விடுவது அவருடைய வழக்கமாக இருந்தது. அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத தினால் கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுகின்ற இயக்கத்தில் இணைந்தார்.

கடவுள் இல்லை என்று சொல்லுகிற எல்லாப் பத்திரிகைகளுக்கும் சந்தாதாரராக மாறினார். இவைகள் எல்லாம் இவருக்கு மன சமாதானத்தை கொடுக்க வில்லை ஆனால் உள்ளான மனிதனில் ஒரு உண்மையான உயிரோடு இருக்கிற ஆண்டவர் உண்டு என்று விசுவாசித்தார்.

தஞ்சாவூரில் உள்ள கிதியோன் இவர்கள் அவருக்கு நீல நிற ஆங்கில வேத புத்தகம் ஒன்றை இலவசமாக வழங்க நேர்ந்தது ஆவலோடு புத்தகத்தை திறந்தபோது ஆங்கிலம் வழியாக திருமறை செய்திகளை அறிந்துகொள்வது கடினம் என கண்டு கொண்டார். தொடர்ந்து பக்கங்களைப் புரட்டியபோது கடைசி பக்கத்தில் பெயரையும் தேதியும் எழுதும் பக்கத்தைப் பார்த்து இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே தாம் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதாக எழுதிவிட்டார்.

அதை தொடர்ந்து ஓர் தெய்வீக வல்லமை அவரில் கிரியை செய்தது என்று கூறினார் தொடர்ந்து நண்பர்களின் அழைப்பிற்கு இணங்கி Evangelical union கல்லூரி மாணவர்களுக்காக நடத்தின கூடுகையில் கலந்து கொண்டார். இயேசு கிறிஸ்துவை குறித்து அதிகமாக அங்கு கேட்டறிந்தார்.அங்கு யாரோ ஒருவர் கொடுத்த கிதியோன் தமிழ் புதிய ஏற்பாடு அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு வினியோகம் செய்வதற்கு உதவி புரிந்தார்.

தொடர்ந்து கிதியோன் இயக்கத்தில் இணைந்து ஊழியம் செய்யும் வாஞ்சை உருவானது இந்த நல்ல வாய்ப்பு கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் c.s.i. மார்த்தாண்டம் மருத்துவமனையில் பணிபுரிந்த போது மார்த்தாண்டம் கிபியோனியர் முகாமில் 2007 ஆம் ஆண்டு இணைந்தார். 2008 ஆம் ஆண்டு நடந்த போதகர்களின் பாராட்டு விழாவில் கமல் சாட்சியை கூறினார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

 நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
           
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

ரிக்ஷா வண்டி ஓட்டுனர் போதகர் ஆனார்!

 பகவான் சகாய் என்ற மாணவர் ஒரு ஏழை இந்து குடும்பத்தில் நான்கு மூத்த சகோதரர்களுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக பிறந்தவர். இவருடைய பெற்றோர் தின கூலிக்கு வேலை செய்கிறவர்கள், குடும்பத்தில் வறுமை எனவே நான்கு சகோதரர்களும் ரிக்ஷா வண்டி ஓட்டுனராக பணிபுரிந்தனர்.

இவரை மட்டும் பள்ளிக்கு அனுப்பி கல்வி பயில வைத்தனர் இவரது தந்தையார் இவருக்கு சிறு வயதில் காலமானதால் கல்வியை நிறைவு செய்ய இயலவில்லை.வாலிப பருவம் அடைந்ததும் தனது சகோதரர்களை போல ரிக்ஷா ஓட்டும் தொழிலை மேற்கொண்டார் தான் சம்பாதிக்கும் பணம் தமக்கே போதவில்லை சூதாட்டமும் எல்லா வகையான கூடா நட்பும் ஏற்பட்ட காரணத்தினால் திருட்டு தொழிலில் ஈடுபட்டார்.

1966-ம் வருடம் இவரது சகோதரருக்கு வழங்கப்பட்ட "நயா நியமம்" என்ற சிவப்பு நிற புதிய ஏற்பாடு வீட்டில் கேட்பாரற்று கிடந்தது அப்புத்தகத்தை எடுத்து ஆர்வத்தினால் வாசிக்க ஆரம்பித்தார் .அதில் இயேசு கிறிஸ்துவையும் அவர் செய்த அற்புதங்களையும் கண்டார் ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் திருட்டுத் தொழிலையே செய்து வந்தார்.

சில வருடங்களில் அவருடைய தாயாரும் காலமாகிவிட்டார்கள். தமது தீய குணத்தின் காரணமாய் எல்லோராலும் வெறுக்கப்பட்டு அசுத்த ஆவியின் பிடியில் சிக்கித்தவித்தவராக 1997 ஆம் ஆண்டு மனமறிந்து தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் படி ஓடினார்.

அந்த நேரத்தில் நன்கு உடை அணிந்த 3 வாலிபர்கள் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக சில புத்தகங்களை வழங்குவதை கண்டார் அவர்கள் அவருக்கும் ஒரு புத்தகத்தை கொடுத்து அதைப் படிக்கும்படி சில வழிகளை காண்பித்து இப்புத்தகம் நல்வாழ்வுக்கு எப்படி உதவும் என கூறினார்கள்.

இங்கு ஏதாவது இந்த புத்தகத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வசதியான இடம் உண்டா என வினவிய போது, அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.வேத புத்தகத்தை பெற்ற அவர் தொடர்ந்து வாசித்து வரவே அவரின் தீமையான எண்ணங்கள் மறைந்து புதிய மனிதனாக வாழ்க்கையை மேற்கொண்டார்.

அதன்பின் வேதாகம கல்லூரியில் இணைந்து அறிவியல் கல்வியை 2000 ஆண்டில் நிறைவு செய்து போதகப் பணியை ஏற்றுக் கொண்டார். 2002 ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்ட அவர் பாரத்பூர் என்ற இடத்தில் நான்கு திருச்சபைகளை நிறுவி போதக பணியை செய்து வருகின்றார். "நான் தற்கொலை செய்த சென்ற போது ஒருவரின் வேத புத்தகம் என் கையில் கிடையாதிருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்குமோ" என்று கூறுகின்றார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

விமானப் பணியாளர் ஒருவரின் சாட்சியம்

நியூயார்க்கில் இருந்து மும்பை வரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜிம் என்பவர் பணி செய்து வந்தார் அட்லாண்டில் நடைபெற்ற அகில உலகங்களின் கூடுகையில் கலந்துவிட்டு தெண் மாநில முன்னாள் தலைவர் பேராசிரியர் அவர்களும் சாம் ஜாண் அவர்களும் அதே விமானத்தில் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்க்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஜிம் அவரிடம் சென்று உங்களுக்கு பருவகுவதற்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டார். குளிர்பானம் ஒன்றை கொண்டுவரும்படி பேரா. சாம் ஜாண் கேட்டார். அதை அருந்திய பின் அயர்ந்து தூங்கி விட்டார்.

கண்விழித்த போது மறுபடியும் அவருக்கு ஜிம் குள்ரிபானம் பரிமாறினார். தொடர்ந்து அவரை நன்றாகக் கவ்வரித்தார். விமானம் மும்பையை அடைந்ததும் தாங்கள் எக்காரணத்தை முன்னிட்டு பல தடவை என்னை நன்றாக உபசரித்தீர்கள் எனக் பேராசிரியர் சாம் ஜாண் வினாவினார். அதற்கு ஜிம் "உங்கள் சட்டையில் பதிக்கப்பட்டிருக்கும் கிதியோனியர் முத்திரை என்னைக் கவர்ந்த்து" என்றார். அழிவிற்க்கு நேராக போய்க்கொண்டிருக்கும் பலரையும் கிறிஸ்து இயேசுவிற்குள் இழுத்து வரும் வேத புத்தகத்தை வழங்கும் இயக்கத்தில் நீங்கள் அங்கத்தினர் என்பதை அறிந்த்க்கொண்டேன் என்றார். தாங்கள் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டவரா? என பேராசியர் சாம் ஜாண் கேட்டபோது ஜிம் தமது சொந்த அனுபவத்தைக் கீழ்வருமாறு விளக்கினார்.

ஒருநாள் விமானத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கேயே குப்பை கூடையில் கிடந்த கிதியோனின் வேத புத்தகம் ஒன்று என் கண்ணில் பட்டது.அதை கவனமாக எடுத்து சுத்தம் செய்து விமானத்தில் உள்ள மேடை அறை ஒன்றில் வைத்தேன்.இதை கண்ணுற்ற விமான பணிப்பெண் என்னிடத்தில் என்னவென்று விசாரித்தால் இதை விமானத்தில் உள்ள கழிவறைகள் கண்டெடுத்தேன் இது கிறிஸ்தவர்களின் புனித நூல் என்றும் சமயம் கிடைக்கும்போது வாசிக்கலாம் என்று இருக்கிறேன் என்றும் கூறினேன்.

இப்புத்தகத்தை குறித்தும் இயேசுவின் போதனைகளை குறித்தும் நீ அறிவாய் அறிவாய் என என்னிடம் கேட்டால் ஜிம் எனக்கும் எதுவும் தெரியாது எனக் கூற அவள் புதிய ஏற்பாட்டின் அனேக அதிகாரங்களையும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவருடைய போதனைகள் அவர் செய்த அற்புதங்கள் இயேசுவின் அன்பு தொடர்ந்து சிலுவையில் நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த செய்திகளை விவரித்துக் கூறினாள்.

இவைகளை கேள்விப்பட்ட நான் இயேசுவை எனது சொந்த ரட்சகராக உடனே ஏற்றுக்கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட பேராசிரியர் ஜான் வேத புத்தகம் வழங்கும் தேவனுடைய வேலையை செய்வது மிகவும் முக்கியமானது என்று கருதி மகிழ்ந்தார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

அந்தணர் குலப் பெண்ணின் மாற்றுருவாக்கம் !

மாதவி என்பவர் ஒரு இந்து அந்தணர் குலத்தில் பிறந்து வளர்க்கப்பட்டார். தனது குழந்தை பருவத்தையும், இளம்பருவத்தையும் ஒடிசா மாநிலத்தில் செல்விட்டார். ஆனால் அவரது தந்தையின் தாயார் ( பாட்டி ) கர்த்தரை அறிந்தவர். மாதவியின் தந்தை சிலை வணக்கம் செய்பவராக இந்து மதத்திலேயே இருந்து வந்ததினால், கிறிஸ்தவராய் வாழ்ந்து வந்த பாட்டிக்கு தினமும் உணவை வீட்டின் வராந்தாவில் இருந்தி பரிமாறி அவரை இரண்டாம்தமாக நடத்தி வந்தார். இச்செயல் மாதவியின் சிந்தனையை தூண்டியது. இதனால் உண்மையான இறைவன் யார் எனக் கண்டுபிடித்து, அவரையே சேவிக்க வேண்டும் என்ற அவர் தம் உள்ளத்தில் தோன்றியிருப்பதை மாதவி உணர்ந்தார். 13 வது வயதில் கிதியோனிய புதிய ஏற்பாடு கிடைக்கப்பெற்றார். அவரது ஆசிரியரின் வழிகாட்டுதலினால் ஜெபிக்கவும் கற்றுக்கொண்டார். ஆவிக்குரிய வாழ்வினில் வளர்ச்சியடைந்தார்.

ஒருநாள் திருச்சபைக்குச் சென்று விட்டு வரும்போது, தமது தகப்பனாரால் கையும் களவுமாகப் பிடிக்காப்பட்டார். அவரது தந்தை கோபத்துடன் அவரை அடித்துத் துன்புறுத்தினார். மத்தேயு 5:4,10 வசனங்களின் மூலமாக அவரது ஆசிரிய்ரால் ஆறுதல்படுத்தப்பட்டார்.

அதன்பின்னார் அவர்கள் ஒடிசா மாநிலம், பூரியிலுள்ள அவரது பாட்டியின் வீட்டிற்க்கு குடும்பமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அங்கும் ஒருனாள் ஓய்வு நாள் பாடசலியக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வழியில் மாதவியை அவரது தந்தை வழிமறித்து அடித்து உதைத்தார். அவரது மனதை மாற்றவும் முயற்சி மேற்கொண்டர். இந்நிலையிலும் மாதவி தொடர்ந்து குளியறையில் ஒளிந்துகொ?ண்டு இரகசியமாக வேதபுத்தகத்தைப் படித்து வந்தார். பின்னர் ஆந்திராவிலிள்ள் சோதிடர் ஒருவருக்கு மாதவியைத் திருமணம் செய்து கொடுத்தனர். கணவரின் குடும்பத்தினர் மாந்திரீகம், மற்றும் சிலை வணக்கம் போன்ற பழக்கங்களுக்கு மாதவியை அடிமைப்படுத்த முயற்சி செய்தனர். இத்தகைய துயரமான நிலையிலும் மாதவி வேதபுத்தகத்தை தொடர்ந்து விடாது படித்து வந்தார்.

இவ்வேளையில் அவருடைய மாமியாருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ ஆய்வு மூலம் தெரிய வந்தது. மரித்துகொண்டிருக்கும் வேளையில் மாதவியின் தவியால் அவர்து மாமியார் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். தமது மகள்களையும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக எற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தினார்கள்.

கடவுள் மாதவியின் கண்வனைத் தொட்ட்போது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சராக ஏற்றுக்கொண்டார். கர்த்தர் மாதவியின் அழுகையை ஆனந்தகளிப்பாக மாற்றினார். கர்த்தர் அருளிய சந்தோஷத்திற்கு எல்லையில்லை. இன்று தம்முடைய முழு குடும்பமும் மாதவியின் கணவரின் சகோதர சகோதரிகளும் கர்த்தரை சேவிக்கின்றார்கள். மாதவி சாராள் எனவும், அவரது கணவர் ஆபிரகாம் எனவும் அழைக்கப்படுகின்றனர். கர்த்தருக்கே மகிமை, தம் இருதயம் நிறைந்த நன்றியைக் கிதியோனியரின் ஊழியத்திற்க்கு செலுத்துகிறார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

டாக்டர் கோவிர்த்தினி கடவுளின் நிபந்தனையில்லாத அன்பை ருசித்தார்!

 டாக்டர் கோவிர்த்தினி கடவுளுக்குப் பயப்படுகிற இந்து குடும்பத்தில் பிறந்தார் . ஒரு கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றதினால் அநேக வேளைகளில் நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதை அறியாதிருந்தார். அநேக வேளைகளில் அவருக்காக அநேகர் ஜெபித்தனர்.

மலேசியா நோய் தடுப்பு பிரிவில் மருத்துவ ஆய்வுத் தலைவராகப் பணியாற்றிய வேளையில் ஒரு பள்ளியை ஆய்வு செய்வதற்க்காக கடந்து சென்றனர். அப்பள்ளியின் முதல்வரும், மாணவர்களும் இவர்களுக்கு சங்கீதங்கள் அடங்கிய புதிய ஏற்பாட்டை வழ்ங்கினர். அதைத் தொடர்ந்து அவர் எங்கு சென்றாலும் அப்புதிய ஏற்பாட்டை எடுத்துச் சென்றார்.

சவுதி அரேபியாவிற்கு சென்றபோதும் மற்ற சமயப் புத்தகங்களோடு இந்தப் புதிய ஏற்பாட்டினையும் எடுத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டில் அவருக்கு மிகவும் ஆறுதல் அளித்த பகுதி சங்கீதம் 23 ஆகும். அவர் வேலையை இழந்து துன்புற்று வேளையில் சென்னையிலிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களிடம் ஜெபிக்கச் சொல்லியும் தம்மிடமிருந்த வேதபுத்தகத்தை வாசித்தும் ஆறுதலடைந்தார். அடுத்த பத்து நாட்களில் தாம் வேலை பார்த்த இடத்திற்க்கு அருகாமையிலுள்ள இன்னொரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியா வரும்வரை அவரது வாழ்வில் நடைபெற்ற எல்லா சம்பங்களிலும் கடவுளின் கரம் இருந்ததை தெளிவாகக் கண்டார். இந்நிலையில் சென்னையில் கர்த்தரின் கரம் என்ற ஸ்தாபனத்தைச் சார்ந்த சுவிசேஷகரோடு தொடர்பு கிடைத்தது. இங்கு வந்த பின் உண்மையான் ஜீவிக்கின்ற ஆண்டவராகிய இயேசுவைச் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார்.

ஒரு நல்ல வேலை, தங்குவதற்கு ஒரு இடம் , ஒரு திருச்சபை ஆகியவற்றைத் தந்தார். கர்த்தர் அவரது எல்லா தேவைகளையும் சந்தித்தார். தற்போது விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறார். அவரது பெற்றோரும் , குடும்பத்தினரும் கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பினால் ஆட்கொள்ளப்பட்டனர். இன்று கிறிஸ்து தமக்கு ஒரு உறுதியான சாட்சியாக அவரை பயன்படுத்திகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக!

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

இந்து பூசாரியின் மகன் இப்போது வல்லமையுள்ள கடவுளின் ஊழியக்காரன்!

நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள பூரண சுவிசேஷ பெந்தெகோஸ்தே சபையில் திரு.ஜாய்சன் என்பவர் போதகராயுள்ளார். இவர் ஒரு இந்து அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்தவர். இந்து சமய வழிபாடுகளிலும், மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றாவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்துபோது ஒருநாள் அவருக்கு ஒரு வேத புத்தகம் கிதியோனியர்களால் இலவசமாக வழ்ங்கப்பட்டது. அப்புத்தகத்தை அவர் தமது புத்தக அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

சிலகாலம் சென்றபின் அப்புத்தகம் தம்மிடம் இருந்ததை மறந்துபோனார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின், அரசில் வருமானவரி ஆய்வாள்ராக பணியேற்றார். ஒரு நாள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்னல் தாக்கியது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், சிலகாலம் மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுப் பின் நலம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து பயம் என்னும் மனநோயினால் அவதியுற்றார். எப்பொழுதாவது மழை, இடி, மின்னல் ஏற்படும் போது பயத்தினால் பாதிக்கப்பட்டு நடுங்குவார். இவ்விதமான கொடிய சூழலில் தமக்கு கிடைத்த வேதபுத்தகம் அவரது நினைவிற்கு வந்தது. அப்புத்தகத்தைத் தேடி வாசித்தபோது யோவான் 14:27 ( உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக) அவரது உள்ளத்தில் ஒரு தைரியத்தை கொடுத்தது, பயம் மறைந்தது. இயேசு கிறிஸ்துவை இரட்சராக ஏறுக்கொண்டார். அரசுப் பணியை துறந்து முழுநேர ஊழியராய் மாறினார்.

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் #கலங்காமலும் #பயப்படாமலுமிருப்பதாக.யோவான் 14:27

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

என் கர்த்தர் என் தேவைகளை சந்திப்பார்!

 இராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்த அந்தணரான சிவரான் என்பவரின் மகன் நம்பு நாராயணன் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் படித்து வந்தார். ஒரு நாள் தூத்துக்குடி கிதியோனியர் முகாம் வ.உ.சி. கல்லூரியில் வேதபுத்தக வினியோகம் செய்வதற்கு ஒழுங்கு செய்திருந்தனர். அவர்கள் நம்புவுக்கும் ஒரு பிரதியை கொடுத்து வாசிக்கும்படி உற்சாகப் படுத்தினார்கள். இது கிறிஸ்துவர்களின் புனித நூல் என்பதையறிந்து ஏதேச்சையாக திறந்து வாசித்தபோது யோவான் 3:16 ஆம் வசனத்தை வாசிக்க் நேர்ந்தது.
 
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

அதே அதிகாரத்தில் மெய்யாகவே, மெய்யாகவே என்ற வார்த்தை அவருக்கு ஜீவ நம்பிக்கையைக் கொடுத்தது. புதிய ஏற்பாட்டு தூர கால சம்பவங்களை வாசித்தபோது அதைக் கடவுள் சமீபமாக கொண்டு வந்தார். தொடர்ந்து வேதபுத்தகத்தை வாசித்தபோது ஏரேமியா 15:16-ம் வசனத்தின் சாப்பிடுகிற அனுபவம் போல் இருந்தது. வேதபுத்தகத்தை இன்னும் கருத்தாய்ப் படிக்க ஆரம்பித்தார்.

எபி. 12:!-ஆம் வசனத்தை வாசித்த போது யாரோ ஒருவர் கூட இருப்பது போனற உணர்வு ஏற்பட்டது. ஏரேமியா 17:9- ஆம் வசனத்தின்படி தான் பாவி என்ற உணர்வு ஏற்பட்டது. யோவான் 3:17,18 அவர் மூலமாக உலகம் இரட்சிக்கப்பட வேண்டும் , அவரை விசுவாசியாதவர்கள்  ஆக்கினைத்தீர்ப்படைவார்கள் என்பதையும் பார்த்தபோது நம்பு உள்ளத்தில் மன அமைதியை இழந்தார். யோவான் 3-ஆம் அதிகாரத்தை மீண்டும் வாசித்தபோது மெய்யாகவே, மெய்யாகவே என்ற வார்த்தை அவரை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார்.

விடுமுறை நாட்களில் இல்லம் சென்ற போது, தங்கள் வழக்கத்தின்படி நெற்றியில் அணியும் விபூதி இல்லாததைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இன்று மரித்தால் எங்கே போவாய் என்ற கேள்வியைக் கோவிலில் வேலைபார்த்த தாத்தவிடம் கேட்டபோது அவர் பயந்து தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். ஆனால் ஆண்டவர் தமக்கு எபிரேயர் 2:14, 15-ஆம் வசனத்தின்படி மரண பயத்திலிருந்து விடுதலை கொடுத்ததாகக் கூறினார். நம்புவின் தந்தை ஏன் திருநீறு பூசவில்லை எனக் கேட்டபோது, தைரியமாக இயேசுவை வாழ்வில் பின்பற்றுவதாகக் கூறினார்.

எனவே இவரது தந்தை இவரை நான்கு காரியங்களை செய்ய சொல்லி வீட்டை விட்டு துரத்தினார். அவையாவன:

1. வேதபுத்தகத்தை படித்தது தவறு என்று சொல், இந்து தெய்வங்களை நமஸ்காரம் பண்ணி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
2. மூன்று தங்கைகளின் திருமணத்தை யார் நடத்தி வைப்பார்கள்?
3. நம்பு என்ன செயதாலும் பரவாயில்லை, வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்தாலும் அவரை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் வேதபுத்தகத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறினார்.
4. நம்பு அவருக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு கிறிஸ்தவனுக்கு தான் பிறந்திருக்கிறாய் ஆதாலால் வீட்டை விட்டு வெளியேறு என்று கூறினார்.

இந்த வேளையிலும் யோவான் நற்செய்தி நூலை வாசித்தபோது 14-ஆம் அதிகாரம் 27-ஆம் வசனத்தின்படி தெய்வீக சமாதானத்தினால் நம்புவை ஆண்டவர் ஆட்கொண்டார்.

எனவே வீட்டைவிட்டு வெளியேறி தூத்துக்குடி வந்தார். அங்கு பேராசிரியர் ஜவன் பாலசிங் ( காமராஜ் கல்லூரி ) என்பவரது வீட்டில் தங்கினார். அடுத்தநாளே அவரது அப்பா அங்கு வந்து பேராசிரியரைத் திட்டினார். தொடர்ந்து அப்பேராசிரியர் இறைவாழ்வு, கிறிஸ்தவ அன்பு, நமது எல்லா தேவைகளுக்கும் ஆண்டவரைச் சார்ந்திருக்குபோது ஆண்டவர் எல்லா தேவைகளையும் சந்திப்பார் என ஊக்குவித்தார்.

அநேக வருடங்கள் அவரது தகப்பனார் பேசாமல் இருந்தார். பின்னர் பேசினார். கல்லூரிப் படிப்பை முடித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணைந்து மேற்கு வங்காளத்தில் 4 வருடங்கள் பணி செய்தார். பின் துபாய் நாட்டில் 6 வருடங்கள் பணிபுரிந்தார். சகோதரிகள் 3 பேருக்கும் திருமணம் முடித்து வைத்தார். இவ்வேளையில் தாயார் சுகவீனமாக உணர்வற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

தாயாருக்காக ஜெபித்தபோது இயேசு அற்புத சுகம் தந்தார். இதனால் இரண்டு தம்பிகளும் இரட்சிக்கப்பட்டனர். மூன்று தங்கைகளும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. துபாய் பட்டணத்திலிருந்து இந்தியா வந்தார். ஆண்டவரின் அழைப்பை உணர்ந்தார் ஏசாயா 6:8-ன் படி " யாரை அனுப்புவேன்? யார் நமது காரியமாய்ப் போவான் "  என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு பி.எஸ்.என்.எல் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு சுவிசேஷ வேலையை செய்து வருகிறார்.

கிதியோன் இயக்கத்திற்க்கு நன்றி கூறுகின்றார்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

பாக்கியலெட்சுமியின் இறைப்பணி இருளிலிருந்து ஒளியினிடத்திற்க்கு...

திருமதி பாக்கியலெட்சுமி தன் பெற்றோருக்கு 5-ஆவது குழந்தையாக பிறந்தார். முதலில் பிறந்த நான்கு குழந்தைகளும் இறந்துவிட்ட காரணத்தினால் பாக்கியலெட்சிமியை கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் என்ற நகரில் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றில் அவருடைய பெற்றோர் ஒப்படைத்துவிட்டனர்.

அக்குழந்தையை ஏற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள் அக்குழந்தையை பெற்றோரிடத்திலேயே கொடுத்து வளர்த்து தரும்படி கேட்டுகொண்டனர். அவரது இல்லத்தில் எல்லா இந்து  தேவர்களின், தேவதைகளின் படங்களும், சில சிலைகளும் இருந்த போதிலும், அவர் மன அமைதி இல்லாதவளாக இருந்தாள்.

தன்னை நேசிக்கினற சமாதானம் தரும் கடவுளைக் கண்டுகொள்ள வாஞ்சித்தாள். அவள் வளர்ந்து வரும் வேளையில் அவள் படித்த பள்ளியில் கிதியோனியர்களால் வழங்கப்பட்ட வேதபுத்தகம் ஒன்று அவளுக்கும் கிடைத்தது. அதை அவள் ஒவ்வொரு பக்கமாக தெளிவாக படிக்க ஆரம்பித்தாள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை, பாடுகளை, உயிர்ந்தெழுதலைக் குறித்து வாசித்தபொழுது, அவளுடைய உள்ளத்தில் ஒளியூட்டபட்டவளாக, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள்.

தொடர்ந்து முதலாவதாக தந்தையையும், பின்பு தாயையும் இழந்து ஆனாதையானபோது இயேசவின் அன்பு தன்னை தாங்கியதாக அவள் கூறுகின்றாள்.

1973- ஆம் ஆண்டு ஒவ்வொரு நாளும் வேத புத்தகம் தன்னோடு பேசுவதாகக் கூறினாள். திருமணத்திற்க்கு முன்பு இந்திய ராணுவத்திலுள்ள் தாதியர் பிரிவில் சேர்ந்து பணி செய்ய விரும்பினாள். திருமணத்திற்க்கு முன்பே தன் எதிர்கால கணவரிடம் வேத புத்தகத்தைப் பற்றி கூறினாள். அச்சமயம் அவளது கணவர் கப்பல் வேலை செய்து வந்தார். திருமணம் நிறைவடைந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வேதபுத்தகத்தை படித்தாள்.

அந்த வேத புத்தகத்தை ஆவலோடு கண்காணித்தாள். கப்பல் வேலைக்கு செல்லவிருந்த கணவருக்கு வேத புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினாள். நாட்கள் செல்லச்செல்ல அவரும் வேத புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு கிதியோனிய வேத புத்தகத்தை இரண்டுபேரும் இணைந்து  வழங்குகிறார்கள். தற்போது இருவரும் மங்களூரிலுள்ள கிதியோனியர்கள் முகாமில் அங்கத்தினார்கள். பாக்கியலெட்சுமி மங்களூர் மூகாமில் ஆக்ஸிலரி தலைவர் ஆவார்.

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

இயேசு புற்றுநோயிலிருந்து விடுதலை அளித்தார்!

கோவை மாவட்டத்தில் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கும் சிறுமுகை என்னும் கிராமத்தில் செடையப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு உறுதியான இந்துவாக இருந்தார்.

அவர் மட்டுமே தன் குடும்பத்தினருக்கு பணம் ஈட்டுபவராக இருந்து வந்தார். அவரது தந்தைக்கு திடீரென மூக்கில் புற்றுநோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதியாக சொன்னார்கள். அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால் நல்ல மருத்துவமனையில் சிகிட்சையளிக்க முடியவில்லை.

2008-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனையில் சில கிதியோனியர்களும், ஆக்ஸிலரிகளும் இவரைச் சந்தித்து,அவருக்கும், குடும்பத்தினருக்கும் வேத புத்தகம் வழங்கினர். அவர்களோடு சேர்ந்து ஜெபித்து வேதத்தை வாசிக்கும்போது இந்த நோயிலிருந்து ஆண்டவர் சுகம் அளிக்க முடியும் என்று கூறினார்கள். மருத்துவர்களால் குணமாக்க முடியாத இந்த நோயை, இந்த சிறு வேத புத்தகம் எவ்வாறு குணமாக்க முடியும் என சந்தேகித்தனர்.

எனினும் வீட்டிற்கு சென்று வேத புத்தகத்தை கருத்தாய் வாசித்தனர். இயேசு கிறிஸ்துவக் குறித்து வாசித்தபோது அவர்கள் வாழ்வில் ஒரு புதிய தன்மை ஏற்பட்டது. இந்த கடவுள் எவ்வளாக நேசிக்கிறார், பாதுகாக்கிறார் என ஆச்சரியப்பட்டனர். இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தனர். சில நாட்களில் செடைப்பனின் தந்தையின் மூக்கிலிருந்து சதை சுருங்கி அவர் பூரணமாக குணமடைந்தார்.

அவரின் முழுக் குடும்பமும் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மேட்டுப்பாளையத்திலுள்ள ஒரு திருச்சபையில் ஆண்டவரை ஆராத்தித்து வருகின்றனர்.

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

அவருடையவார்த்தை வெறுமனே திரும்பாது!

டெல்லியிலுள்ள கிதியோனியர்களோடு இணைந்து கிதியோனின் 3 அங்கத்தினர்கள் புது டெல்லியிலுள்ள பவிச்சா சமுதாய கல்லூரிக்கு புதிய ஏற்பாடு வேத வினியோகத்திற்க்காகச் சென்றிருந்தனர்.

அங்கே ஏறக்குறைய  20 மேற்ப்பட்ட 300 மாணவிகள் அமர்ந்து தொழிற்கல்வி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு ஒரு கிதியோனில் உள்ளவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவ்வாறு ஆண்டவரின் அன்பைக் குறித்துப் பகிர்ந்து கொண்ட வேளையில், அக்கல்லூரியின் ஆட்சிக் குழுத்தலைவராகிய பாரதி கிதியோனிர்களிடம் தனக்கும் ஒரு சாட்சி கூற வாய்ப்பளிக்க வேண்டி விண்ணப்பித்தார்.

"20 வருடங்களுக்கு முன்னால் கிதியோனியர்கள் வேதபுத்தகம் வினியோகம் செய்தபோது தாமும் ஒரு பிரதியை பெற்றுக்கொண்டார். அதைத் தமது வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசிக்க அரம்பித்தார். வேதத்தின்  மகத்துவத்தினால் தொடப்பட்டவராய் அதை தனது பெற்றோர்களுக்கும் காலை ஆகாரத்தின் போது பகிர்ந்து கொண்டார். அந்தண குல பூசாரியாக இருந்த அவரது தாத்தா  அந்த புத்தகத்தை வலுக்கட்டாயமாகப் பெற்று அதை அழித்தார்.

ஆனால் பாரதி தன்னோடு வேதபுத்தகத்தைப் பெற்றுக் கொண்ட தனது உறவு பெண்ணிடம் சென்று அதை தொடர்ந்து இரகசியமாக படித்து வந்தார். அநேக வருடங்களுக்குப் பிறகு பாரதியின் தாத்தா  காலமானார். எனவே இப்போது பாரதி பயமின்றி வேதபுத்தகத்தை  வாசித்து நற்செய்தியைப் பெற்றோரோடு பகிர்ந்து கொண்டார்.

முடிவாக பாரதி இயேசு கிறிஸ்துவைத் தமது சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டார். தொடர்ச்சியாக அவரது சாட்சியின் விளைவாக அவரது தந்தை, தாய், சகோதரனுடன், சகோதரியும் கிறிஸ்துவை தங்கள் இரட்சராக ஏற்றுக்கொண்டனர்" என்பதே அவரது சாட்சி.

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்க்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11"

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:  91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
           
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

31 August 2020

வேதாகமம் ஒரு கண்ணோட்டம்

 வேதாகமம் ஒரு கண்ணோட்டம்

நன்றி: 

சகோ. D.பாலச்சந்திரன்
Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

ஆவியின் கனிகள்

ஆவியின் கனிகள் 

நன்றி:

சகோ. D.பாலச்சந்திரன்
Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

இருளில் ஒளி

இருளில் ஒளி 

நன்றி: 

Bro.Mani Iyer
Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

 

அடிப்படை சத்தியம்

அடிப்படை சத்தியம்

நன்றி: 

Bro.D. Balachandran
Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

23 August 2020

தமிழ் கிறிஸ்தவ இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய

 தமிழ் கிறிஸ்தவ இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய

 

நன்றி: 

Bro.Yesudas Solomon
http://wordofgod.in/

தேவகுமாரன் இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் - நற்செய்தி

ஆதியில்  தேவன் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினார்.

தேவன் தாமே தம்முடைய சாயலில் மனிதனையும் படைத்தார். அவர் படைத்த அந்த  மனிதனோடு அனுதினமும் உறவாடிவந்தார். ஒருநாள் அந்த மனிதன் தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் தேவனின் சமுகமும், ஜீவ விருட்சம் இருந்த  ஏதேன் தோட்டத்திலிருந்து அவன் துரத்தப்பட்டான். ஆதியாகமம் 1-3

அந்த முதல் மனிதனின் பெயர் ஆதாம், அந்த ஆதாம் என்ற ஒரு மனிதனின் மீறுதலினாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்து, ஆதாமின் வழியில் வந்த அனைவரையும் அதாவது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுக்கொண்டது. ரோமர் 5

ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
மனிதனின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ஏசாயா 1

நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். யூதர்களும், கிரேக்கர்களும், உலகத்தார் யாவரும் பாவத்திற்க்குட்பட்டவர்களாய் வாழ்ந்துவந்தார்கள். அந்தபடியே: நீதிமான் ஒருவனாகிலுமில்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத்தேடுகிறவன் இல்ல; எல்லோரும் வழிதப்பி, ஏகமாய்க்கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை!  ரோமர் 3

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை, நாமோ இருளாயிருக்கிறோம்.
தேவன் பரிசுத்தராயிருக்கிறார், அவருடைய பிள்ளைகளான நாமோ பாவஞ்செய்து,  பரிசுத்தமிழந்து, தேவமகிமையற்றவர்களாகி தேவக்கோபாக்கினைக்கு கீழாக வாழ்ந்து வந்தோம்.
 

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிற தேவன் தம்முடைய ஒருபேறான குமாரனை உலகத்தில் அனுப்பி, அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

தேவன் அன்பாயிருக்கிறார் என்று நாம் அறிந்ததே. அன்பாயிருக்கிற தேவன், பாவத்திலும் மரணத்திலும் அகப்பட்டு விடுபட வழிதெரியாமல் தவித்துக்கொண்டு, கதறிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இரக்கம்பாராட்டாமலிருப்பாரா? ஆம் அளவில்லா இரக்கம்பாராட்டினார்....!!! எப்படி?! தம்முடைய ஒரே பேறான  குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

பாவிகளாகிய நாம் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள்  தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். பாவங்களினாலேயும், மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த நம்மை அக்கிரமங்களெல்லாவற்றையும் நமக்கு  மன்னித்து கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

அந்த குமாரனனவர் எப்படிப்பட்டவர்

  • மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன்
  • இவர் தேவனின் மகிமையின் பிரகாசமும், தேவனின் தன்மையின் சொருபமுமானவர்.
  • இவர் அதரிச தேவனின் தற்சுருபமானவர்.
  • ஆதியிலிருந்தே தேவனோடிருந்தவர், தேவனாயிருந்தவர்.
  • தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இந்த குமாரனுக்குள் வாசமாயிருக்கிறது.


இந்த குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு -

  • நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் ;
  • குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், குமாரன்  அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
  • ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
  • இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
  • தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.
  • குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.  
  • ஜீவனும், அழியாமையும், தேவனிடத்தில் சமாதானமுமாம்.


நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். தேவன்  ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

எபிரெயர் 10:4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே, அப்படி வருஷந்தோரும் இடைவிடாமல் செய்துவரும் பலியினால் யாருடைய மனச்சாட்சியும் பூரணப்படவில்லை, அவர்களது மனச்சாட்சியே அவர்களுக்கு  பாவங்களுண்டு என்ற குற்றயுணர்வு  அவர்களுக்கு இருந்தது. Hebrews 10:1-4 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். எபிரெயர் 9:9  

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக்  தேவன் கட்டளையிட்டார்;  ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.லேவியராகமம் 17:11

இயேசுகிறிஸ்துவானவரே நம்முடைய பாவத்தை சுமந்தார் என்று விசுவாசியாவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலேயே சாவோம், நிவாரணி ஒன்றுமே கிடையாது. John 8:24, I Corinthians 15:17  அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழிங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. Acts 4:12

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து நமது பாவத்திற்க்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு முன்றாம் நாள் உயிர்ந்தெழுந்தார், அநேகருக்கு பிரட்சேசமாக தன்னை உயிரோடுயிருக்கிறவராகவும்  காணப்பட்டார்  - இதுவே சுவிஷேசத்தின் விசுவாசத்தின் வார்த்தை!  1  Corinthians 15:1-11

நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், வெளிதேசத்திலிருந்து வரும் வருங்கால மாப்பிளையும்...

"உன்னவர்தான்  தூரத்தில் வருகிறார் ஆம் அவர் உன்னுடையவர் தான்... என் இரண்டு கண்களினாலே பார்த்தேன் நீ வேணா வந்து பாரேன்"  என்றாள் என்  பக்கத்துவீட்டு  தோழி.

நானும் இதயம் படபடக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்று கூட  கவனிக்காமலும் ஓட்டமாய் ஒடினேன். .... ஆம் என்னவர்தான் ஆம் அவரே தான் அதே நடை, அதே சாந்தம், அதே கண்கள், அதே முகம் .... அதோ வந்துக்கொண்டிருக்கிறார்... ஐந்து நிமிடத்தில் இதோ வந்துவிடுவார். ஆ ஐயோ சந்தோஷம். .... நான் என்ன செய்வேன் தெரியலையே ....

எத்தனை வேதனை, எவ்வளவு துக்கத்தை சகித்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுவேன்,  உன்னை எல்லோருக்கும்  முன்பாக திருமணம் செய்வேன் என்று சொல்லிப்போனவர் இன்றும்தான் வருகிறார்.

பக்கத்துவீட்டு தோழிகள் கூட சொன்னதுண்டு, இன்னுமா உன் ஆளுக்காக காத்திருக்கிறாய் நிச்சயம் பண்ணி மூன்று வருஷம் ஆகிவிட்டது, வந்துவிடுவேன் என்று போனவர் இன்னும் வரவில்லை. நான் சொன்னேன் "எத்தனை  வருஷம் ஆனாலும் சரி, நான் அவருக்காகதான், அவர் என்னுடையவர் தான் "

இதோ அருகில் வந்துவிட்டார், நான் அவரை நோக்கி ஓடினேன், என் கண்களில் கண்ணீர் கொப்பளித்து, முகத்தை நனைத்தது. ஓடோடிபோய் அவரை பிடித்துக்கொண்டேன், அழுகை.... அழுகை...  கண்ணீர் கண்ணீர்  முகத்தை நினைத்தது.

எங்களை சுற்றி யார் நிற்கிறார்கள் நாங்கள் அறியோம்!!!

கடவுள் தன் முழுசித்தத்தையும் தன்னுடைய குமாரனான இயேசுகிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றுதல்!!!

கிறிஸ்தவம் - கடவுள் தன் முழுசித்தத்தையும் தன்னுடைய குமாரனான இயேசுகிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றுதல்!!!

கடவுள் பரிசுத்தராயிருக்கிறார், அவர் படைத்த அனைத்து சிருஷ்டிகளும் பரிசுத்தமாயும், நன்மையாயும் இருந்தது.

மனிதனையும் பரித்தமாயும், பூரணமாயும், செம்மையாயும் படைத்தார். கடவுளான தனக்கு தன்னுடைய சிருஷ்டிகள் அனைத்தும் கீழ்ப்படிய வேண்டுமென்று விரும்பினார்.கீழ்ப்படிந்து வாழ்ந்தால் நன்மையும், ஜீவனும் உண்டென்றும், கீழ்ப்படியாமல் போனால் தீமையும், மரணமும் உண்டென்றும் உறுதியாக சொல்லியிருந்தார்.

ஆனால்  மனிதர்களோ கடவுளுக்கு கீழ்ப்படியாமல் தனது அனேக தந்திரமான நடக்கைகளால் கடவுளை விட்டுப்பிரிந்து தன் மனதின் இஷ்டத்தில் நடந்து பாவத்தில் மரித்துபோய் "வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள்".

கடவுள் மனிதர்களை படைத்த நோக்கம் அவர்கள் மாம்ச வாழ்க்கையை முடித்து மண்ணோடு மண்ணாக போகவேண்டும் என்பதற்க்காக அல்ல, இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு ஜீவனுள்ள கடவுளோடு ஜீவனுள்ளவர்களாய் என்றென்றைக்கும்  வாழவேண்டும் என்பதற்க்காகவே! 

கடவுள் அன்பாகவே இருக்கிறார். கடவுள் தன் அன்பை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார்; ஆதியிலிருந்தே தன்னோடு இருந்த அந்த ஜீவனின் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படப்பண்ணினார்
தன்னைவிட்டு விலகிப்போன மனிதர்களை மீண்டும் தன்னிடமாக திருப்பவும், அவர்கள் தன்னோடு அன்பின் ஐக்கியம்கொள்ளவும், பாவிகளான நாம் பரிபூரணபடவும், நமக்கு ஜுவனுண்டாயிருக்கவும், அழியாமையைக்கொடுக்கவும் விரும்பி ஆதியிலிருந்தே கடவுளோடு கடவுளாக இந்த ஜீவன் இருந்தது.

அந்த ஜீவனின் மூலமாக சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அந்த ஜீவனைக்கொண்டும்,அந்த ஜீவனெக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

வானத்திலும், பூமியிலும், காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும் உண்டாகுவதற்க்கு முன்பாகவே அந்த ஜீவன் கடவுளோடு இருந்தது, அந்த ஜீவன் கடவுளாகவே இருந்தது.இந்த ஜீவன் மனுசருக்கு ஜீவனாயிருந்தது, எந்த மனுசரையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாயிருந்தது. அந்த ஜீவன் மாம்சமாகி மனிதனானது -  இவரே கடவுளின் ஒரேபேறான குமாரன் - இயேசுநாதர். இவர் அதரிசமான கடவுளின் தற்சுருபமும்,  காணக்கூடாத கடவுளின் சாயலும், கடவுளின் மகிமையின் பிரகாசமும், கடவுளின் தன்மையின் சொருபமும், ஆதியும், அந்தமுமானவர்.

நாம் ஜீவனுள்ள கடவுளை விட்டுவிலகி பாவத்தில் மரித்து ஜீவனற்றவர்களாயிருந்தோம்.தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் கடவுள் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் கடவுள் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.இந்த உலகத்தில் வேதனைகளும், வலிகளும், மரணமும், பசியும், பட்டினியும், இன்னும் பல பிரச்சனைகளும் உண்டு. அதெற்கெல்லாம் கடவுள் முடிவு வைத்திருக்கின்றார், அந்த முடிவுக்கு தொடக்கமாகவே தம்முடைய குமாரனை நமக்காக அனுப்பினார்.கடவுள் அவருடைய ஒரேபேறான குமாரனை நமக்காக அனுப்பி நம்முடைய பாவங்களையெல்லாம் அவர்மேல்வைத்து பாவமறியாத அவரை பாவமாக்கினார். மூன்றாம் நாள் அவரை உயிரோடெழுப்பி, பரலோகத்தில் தன்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரவைத்தார்.

அந்த குமாரனே இன்று வரைக்கும் நமக்காக கடவுளிடம் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். அந்த குமாரனான இயேசுகிறிஸ்துவே மீண்டும் இப்பூமிக்கு வந்து நம்மை அவரோடுகூட உயரத்தில்  எடுத்துக்கொளளபோகிறார். தேவபிள்ளைகளான நாம் என்றென்றைக்கும் கடவுளோடும், இயேசுகிறிஸ்துவோடும் வாழ்வோம். ஆமென்.நீங்கள் இந்த இயேசுவை  விசுவாசித்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி அதைவிட்டுவிட்டால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிரகாசிப்பவர். வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதை அவரே ஆறுதல் செய்கிறவர், நமக்கு நித்தியஜீவனை தரக்கூடியவர்.

கடவுள்  நமக்காக  ஒரு அழியாத புது உலகத்தையும், வானத்தையும்  உண்டுபண்ணியிருக்கிறார், அவரை விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்கள்,  இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நரகத்தில் நுழைவார்கள், அந்த புது  நகரத்தில் கடவுளோடும், இயேசுகிறிஸ்துவோடும் வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அந்த புதிய உலகத்தில் கடவுள் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

இயேசுநாதரை இப்பூமிக்கு அனுப்பின கடவுளின் நோக்கம் என்ன?

 கிறிஸ்துவம் என்றால் என்ன? இயேசு கிறிஸ்து பூமிக்கு பிதாவால் அனுப்பப்பட்டார், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்.

தேவனின் நோக்கம் - ஒரே மந்தையும், மனிதர்களின் ஏகசிந்தையும், அவர்களில் தேவமகிமையும் உருவாக்கவே.
அவரை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கடவுள் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
...
அவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாகயிருந்தது இப்படி.....
""கடவுள் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,

அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி நின்றார்கள்!""
கடவுள் கதறினார், ஐயோ! ஐயோ! நான் இவர்களை செம்மையானவர்களாக படைத்தேனே! இவர்களோ அநேக உபாயதந்திரங்களை தேடிக்கொண்டார்களே!

யோசித்தார், யோசித்தார். என்ன செய்ய இப்படி கெட்டுப்போன மனிதர்களை?!அப்போழுது, அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்த, நம்ம இயேசப்பா தான், கடவுளுக்கு ஞாபகமாக வந்தாங்க!

"பிதாவே! பிதாவே! உம் சித்தம் செய்யவே, நான் உம்மோடு இருக்கிறேன்! நீர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?, இப்போதிருக்கிற, நீர் எனக்குத் தந்த மகிமையைக்கூட இழந்து, என்னையே வெறுமையாக்கி அடிமை ரூபமெடுக்க இப்போதே தயார்" என்றார்.
கடவுள் சொன்னார் இப்படி " இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."

பாவிகளை காப்பாற்ற கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
நம்ம இயேசப்பா பூமியிலயிருக்கும்போது, பிதாவிடம் நமக்காக இப்படி ஜெபித்தாங்க!

"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."

இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையிலே காத்திருக்கிறோம்.
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அப்படியே ஆகட்டும்!

200 முறை தற்கொலைக்கு முயற்ச்சித்து சாகாதவரின் சாட்சி - PDF download link

புத்தகத்தின் பெயர் - கண்ணீரின் பாதையில் வெற்றி

ஆசிரியர் - சகோதரி மார்கிரெட் ஸ்திரா

புத்தகத்தின் வகை - சாட்சி

ஆசிரியரிடத்தில் பிடித்தது - தேவனோடு நெருங்கிய தொடர்பும், கணவனிடம் அன்பையும் காட்டியது

சிறப்பு - படித்தால் நிச்சயம் உங்களுக்கும் கண்ணீர் வரும். நான் அழுதுக்கொண்டே படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்தில் படித்ததில் பிடித்தது -

  • இந்துவாக பிறந்து, பொய்யான கல்லையும், மண்ணையும் வணங்குவதை விட்டு, மெய்யான தெய்வமான இயேசுவை அறிந்துக்கொண்டது
  • ஆண்டவர் இயேசு வியாதிலிருந்து சுகம் தந்தார்
  •  வேலையில் ஆசீர்வாதம் தந்தார்
  • திருமணத்தை ஆண்டவர் உறுதி செய்தல்
  • கணவனை மிகவும் கனம் செய்தார், கணவனை நேசித்தார், கணவனுக்கு கீழ்ப்படிந்தார்
  • ஆசிரியரின் ஜெபவாழ்க்கை மிகவும் அருமை
  • ஜெபத்தில் இயேசு பேசினார்
  • இரட்சிக்கப்படாத கணவரோடு ஆண்டவர் இயேசு பேசுவது
  • 200 தடவைக்கு மேலாக தற்கொலைக்கு முயற்ச்சித்தும், இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் சாகாத கணவர். 
  •  இன்னும் பல

முழு புத்தகத்தையும் படிக்க கிளிக் செய்யவும் 

 

நன்றி:
 

சகோதரி மார்கிரெட் ஸ்திரா
Bro. Yesudas Solomon
http://wordofgod.in/

11 July 2020

கடவுள் /இறைவன் / தெய்வம் / பராபரன் /சுவாமி யார்?

மனிதர்களுக்கு அனுதினமும் பிரச்சனைகள்!!!  இவ்வுலகத்தில்  மனிதர்கள் அனுபவிக்கும்  வேதனைகளையும், துன்பங்களையும், அழுகுரலையும், மரணஓலத்தையும்,  நம்முடைய கஷ்டங்களை தாங்குபவர் யார் என்ற கதறல் சத்தத்தையும், நமக்கு ஆறுதலான வார்த்தையை தருபவர் யார் என்று ஏங்கும் இருதயத்தையும், எனக்கு நிம்மதியே வராதா என்று தவிக்கும் ஏக்கத்தையும், ஏழைகளின் பசியையையும், ஒடுக்கத்தையும், எப்போது விடியும் என்று காத்திருக்கும் கண்களையும், வயிற்றுக்காக அனுதினமும் பாரசுமப்பதையும்  இரக்கமுள்ள இறைவன்  கண்ணோக்கி பார்க்கவே பார்க்கிறார், காதுகளால் கேட்கிறார்.

இறைவனா? நம்மை கவனிக்கிறாரா? யார் அது? அவர் எப்படியிருப்பார்?  Really who God is? என்று நீங்கள் கேட்கலாம்.

இறைவன்  என்பவர் யார் , அந்த கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர்?! மனிதர்கள் அந்த  கடவுளை  அழைக்கும் பெயர்கள் பல -  இறைவன், பரமாத்மா, பரம்பொருள், ஒளி, ஆண்டவர், தேவன், தெய்வம், ஆண்டவர், சாமி....

கடவுள் எப்படிப்பட்டவர், அவர் யாரென்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.

கடவுளை பலப்பெயர்களில் அழைத்தாலும் , பல உருவங்களில்  வழிப்பட்டாலும்  அவர்  ஒருவராய் இருக்கிறார்.
அவர் இருக்கிறவராக இருக்கிறார், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவர் ஒளியாயிருக்கிறார், ஆவியாயிருக்கிறார்,அன்பாயிருக்கிறார், அதரிசமானவருமாயிருக்கிறார், ஆதியும் அந்தமும் இல்லாதவர்.  
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவரே வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்!
அந்த அன்பான கடவுளே சகலத்தையும் படைத்தவர் - வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர், அவரே  தூதர்களையும், சகலஜீவராசிகளையும், மனிதர்களையும் படைத்தவர்.
அந்த ஒரே காணக்கூடாத தேவன் தம்முடைய ஒரே குமாரன் மூலமாக தன்னை வெளிப்படுத்தினார், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவே ஆதிமுதலிலிருந்து தேவனோடுயிருந்தவர், தேவனாயிருந்தவர்.

-  மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிக்க இறைவன் தம்முடைய குமாரனை மனித  உருவெடுத்து மனிதமாம்சத்தில் வெளிப்படப்பண்ணினார் - அவரே இயேசுகிறிஸ்து!

- அண்ட சராசரங்களும் கொள்ளக்கூடாதவரும், வானாதிவானங்களையும், பூமியையையும் நிரப்புகிறவர் மனிதர்கள் மேல்வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரனை மனுவுருவெடுக்க வைத்தார்.

- அவருடைய குமாரனான இயேசுகிறிஸ்து தம் மகிமையை இழந்து மனிதர்களுக்காக மனிதனானார், நம்முடைய துக்கத்தையும், வேதனையையையும் பார்த்து அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தையும், நித்திய வாழ்வையும் கொடுக்க பரலோகத்தை விட்டு,  மனிதர்களுக்கும், இறைதூதர்களுக்கும் காணப்படும்படி  இறைவனோடிருந்தவர் ,  இறைவனிடத்திலிருந்து இறங்கிவந்தார் - அவரே இயேசுகிறிஸ்து.

இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதலையும்,
சிறுமையானவர்களுக்கும்  ஆறுதலையையும், ,
பாவிகளை பாவத்திலிருந்து விடுதலையளிக்கவும்,
எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கவும்,
மரணத்திலிருந்து  ஜெயத்தை கொடுக்கவும்,  
மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்படவும்,
 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிக்கவும்,
 சிறுமைப்பட்டவனுக்குக் அவரே அடைக்கலமாகவும்,
நெருக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சமாகவும்,
 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்யவும்,
 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யவும்,
மறைவாயிருந்த மகிமை வெளிப்பட்டது ....
காணக்கூடாதவர் தம் குமாரன் மூலமாக காணப்பட்டார் .....

இந்த இயேசுகிறிஸ்துவினிடத்தில்  விசுவாசம் வைத்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி விட்டுவிட்டு, அவரோடு அனுதினமும் பேசி, நெருக்கமான உறவு வைத்திருந்தால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிராகாசிப்பவர், செத்த நம் வாழ்க்கைக்கு ஜீவனைத்தருகிறவர்,  வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதுக்கு அவரே ஆறுதல் தருகிறவர்.

இறைவன் நம்மை படைத்ததின் நோக்கம் நாம் இந்த உலக வாழ்வை முடித்து, மண்ணோடு மண்ணாக மாறவேண்டுமென்பதற்க்காக அல்ல. நம்முடைய உலக வாழ்விற்க்கு பிறகு நமக்கு இன்னோரு அழியாத, இறைவனால் கட்டப்பட்ட புது உலகத்தையும், வானத்தையும்  வைத்திருக்கிறார் , அவரை விசுவாசித்து அவரோடு அனுதினமும் வாழ்பவர்கள்,  இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நகரத்தில் நுழையமுடியும், அந்த புது  நகரத்தில் எப்போதும் தேவனோடு வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அங்கே இறைவன் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

இந்த இறைவன் உங்களுக்கு தேவையா?  அவருடைய குமாரனை நோக்கி - இயேசுகிறிஸ்துவே நீர்  என் வாழ்க்கைக்கு தேவை என்று சொல்வோமா?

Popular Posts